தேசிய செய்திகள்

காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்; இந்தியா பதிலடி

காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

தினத்தந்தி

குப்வாரா,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதனால் எல்லை பகுதியில் மோதல் போக்கு தவிர்க்கப்பட்டு உள்ளது. எனினும், பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி பலமுறை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி தந்து வருகிறது.

இந்த நிலையில், காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷெரா பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6.45 மணியளவில் தாக்குதலில் ஈடுபட்டது. அவர்கள் சிறிய ரக துப்பாக்கிகளை கொண்டு சுட்டும் மற்றும் பீரங்கிகளை கொண்டு குண்டுகளை வீசியும் இந்திய பகுதிகளில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் பாகிஸ்தான் ராணுவம் இதேபோன்று நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்தியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை