தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்திய வீரர்கள் பதிலடி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்னி எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நேற்று காலை 10 மணியளவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியபடி முன்னேறி வந்தனர். அவர்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். ஆனால் இந்த சண்டையில் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்