தேசிய செய்திகள்

பஞ்சாப் எல்லையில் சுற்றித் திரிந்த பாகிஸ்தான் ட்ரோன் விமானம்

பாகிஸ்தானைச் சேர்ந்த ட்ரோன் விமானம் மீது 56 சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பகுதியில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் சுற்றி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த எல்லை பாதுகாப்பு படை, சந்தேகத்திற்கிடமான வகையில் பாகிஸ்தான் ட்ரோன் விமானம் ஒன்று சுமார் 15 நிமிடங்கள் சுற்றி வந்ததாக தெரிவித்துள்ளது.

அந்த ட்ரோன் விமானம் மீது 56 சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், அந்த ட்ரோன் விமானம் திசை திருப்பி விடப்பட்டதாகவும் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதையடுத்து குர்தாஸ்பூர் எல்லை பகுதிகளில் தற்போது பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு