தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான மனுதாக்கல் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) மற்றும் மே மாதங்களில் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ந் தேதி வாக்குப்பதிவு நடை பெறுகிறது.

அதன்படி ஆந்திரா (25), அருணாசல பிரதேசம் (2), அசாம் (5), பீகார் (4), சத்தீஷ்கார் (1), காஷ்மீர் (2), மராட்டியம் (7), மணிப்பூர் (1), மேகாலயா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ஒடிசா (4), சிக்கிம் (1), தெலுங்கானா (17), திரிபுரா (1), உத்தரபிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்காளம் (2), அந்தமான் (1), லட்சத்தீவு (1) ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களை சேர்ந்த தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மனுதாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 25-ந் தேதி ஆகும். மறுநாள் (26-ந் தேதி) வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 28-ந் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் பரந்து கிடக்கும் இந்த தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான தீவிர முயற்சிகளை தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருவதால், வருகிற நாட்களில் பிரசாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்கட்ட தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த தொகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவமும் ஈடுபட்டு உள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்