தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: 6-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நிறைவு

நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 6-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

6-ம் கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிஷாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 6-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

மொத்தம் 7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தேர்தல் நடத்தை விதிகளின் படி தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் தங்கியிருக்க அனுமதி இல்லை. வாக்குப்பதிவுக்கான முழு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து