தேசிய செய்திகள்

போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா- ரஷியா கூட்டு தயாரிப்பில் உருவான பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்டது. 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாக்கும் வல்லமை படைத்தது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான எஸ்.யு. 30 எம்.கே.ஐ. போர் விமானத்தில் இருந்து நேற்று இந்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லும் திறன் படைத்த இந்த ஏவுகணை ஏற்கனவே தரையில் இருந்தும், கப்பலில் இருந்தும் செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து