தேசிய செய்திகள்

விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி

தகவல் அறிந்து விரைந்து சென்ற விமான நிலைய அதிகாரிகள், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தினத்தந்தி

வாரணாசி,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து நேற்று மாலை மராட்டிய மாநிலம் மும்பைக்கு ஆகாசா விமானம் புறப்பட இருந்தது. விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்து இருந்தனர். ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் இருந்த பயணி இருக்கை அருகே இருந்த அவசரகால கதவை திறந்தார். இதுகுறித்து அறிந்த விமானி உடனடியாக விமானத்தை ஓடுதளத்துக்கு மீண்டும் கொண்டு வந்தார். மேலும், இது குறித்து உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற விமான நிலைய அதிகாரிகள், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பயணி ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுஜித் சிங் என்பது தெரியவந்தது. மேலும், அவர் தவறுதலாக அவசர கால கதவை திறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பயணி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து 1 மணிநேர தாமதத்துக்கு பிறகு விமானம் மும்பை புறப்பட்டது. விமானத்தின் அவசர கால கதவை பயணி திறக்க முயன்ற சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து