தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் 70 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது - மத்திய அரசு தகவல்

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் சதவிகிதம் கடந்தாண்டை விட 0.65 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் சதவிகிதம் கடந்தாண்டை விட 0.65 சதவீதம் குறைந்துள்ளது. ஐகோர்ட்டுக்களில் வழக்குகள் நிலுவை 0.82 சதவீதமும், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவை 4.32 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 70 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில்,487 தேர்தல் வழக்குகள், ஆயிரத்து 295 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள், 2 ஆயிரத்து 870 பொதுநல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசியல் சாசன அமர்வில் 498 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மாநில உயர் நீதிமன்றங்களில் சுமார் 10 ஆயிரம் பொதுநல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை ஐகோர்ட்டில் 18 தேர்தல் தொடர்பான வழக்குகளும், 69 ஆயிரத்து 5 ரிட் வழக்குகளும் நிலுவையில் உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்