தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரலாம்...எது குடும்ப அரசியல்? பிரதமர் மோடி விளக்கம்

காங்கிரஸ் கட்சியின் மந்தமாக ஊர்ந்து செல்லும் வேகத்திற்கு யாரும் போட்டி கிடையாது என்று பிரதமர் மோடி பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. கடந்த 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் . இந்த நிலையில், இன்று ஜனாதிபதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக எது குடும்ப அரசியல் என்பது குறித்து பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி கூறுகையில், ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் அரசியலுக்கு வரலாம். ஆனால், ஒரே குடும்பம் கட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல். ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும், மீண்டும், முயற்சிப்பதால் இழுத்து மூடும் நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது" என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்