தேசிய செய்திகள்

“காவி அணிந்தவர்கள் கற்பழிக்கிறார்கள்” - காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்து

காவி அணிந்தவர்கள் கற்பழிக்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்தினை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் துறவிகள் மத்தியில் பேசியதாவது:-

முன்பெல்லாம் ஒரு நபர் தனது குடும்பத்தைவிட்டு பிரிந்ததும் துறவியாக மாறி ஆன்மிக பாதைக்கு திரும்புவார். ஆனால் இப்போது மக்கள் காவி அங்கி அணிந்துகொண்டு போலி மருந்து விற்கிறார்கள். காவி அங்கிகளில் கற்பழிப்புகள் நடக்கிறது. கோவில்களில் கற்பழிப்புகள் நடக்கிறது. இதுபோன்ற செயல்களால் சனாதன தர்மத்துக்கு அவமதிப்பு ஏற்படுகிறது. இதுதான் நமது மதமா? கடவுள் இதுபோன்ற மக்களை மன்னிக்கமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், பா.ஜனதா தலைவர் சுவாமி சின்மயானந்த் மீது சட்டக்கல்லூரி மாணவி கற்பழிப்பு புகார் கூறியுள்ள சூழ்நிலையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து