தேசிய செய்திகள்

தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது குதிரை பேரம் நடைபெற்றதாகவும் அது பற்றி சிபிஐ விசாரிக்கவும் கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டப்பேரவையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் போது ஊழல் நடைபெற்றதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணை தேவை என்றும் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.