தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ்வை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன.

இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன. இந்த போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டு வர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷியாவும் முயற்சித்து வருகின்றன. பல்வேறு நாடுகளில் தூதர்கள், வெளியுறவுத்துறை மந்திரிகள் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் 2 நாள் பயணமாக நேற்று இரவு இந்தியாவுக்கு வந்துள்ளார். ரஷிய வெளியுறவுத்துறையின் இந்த வருகை உலக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரஷியாவிற்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகளை முறியடிக்க முயற்சிக்கும் நாடுகளுக்கு "பின் விளைவுகள்" ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த நிலையில் ரஷிய எண்ணெய் இறக்குமதி தொடர்பாக சர்வதேச அழுத்தத்தின் மத்தியில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு இந்தியா மீது உள்ள சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று மாலை ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார். பிரதமர் மோடியும் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியும் சுமார் 40 நிமிடங்கள் பேசினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு