தேசிய செய்திகள்

போட்ஸ்வானா புதிய அதிபர் டுமா பொகோவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

போட்ஸ்வானா புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டுமா பொகோவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

டெல்லி,

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு போட்ஸ்வானா. அந்நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் டுமா பொகோ தலையிலான ஜனநாயக மாற்றத்திற்கான குடை கூட்டணி வெற்றிபெற்றது. இதன் மூலம் போட்ஸ்வானாவில் 58 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்ற டுமா பொகோ போட்ஸ்வானாவின் 6வது அதிபராக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், போட்ஸ்வானா புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டுமா பொகோவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் , போட்ஸ்வானாவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டுமா பொகோவுக்கு வாழ்த்துகள். இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்