புதுடெல்லி,
மோடியின் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் பயணத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு மற்றும் உலகத் தலைவர்களுடனான முக்கிய சந்திப்புகள் அடங்கும்.
பிரதமர் மோடி நாளை முதல் 4 நாட்கள் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானில் அரசுமுறை சுற்றுப்பயணம் செய்கிறார். இதில் முதல் பயணமாக உஸ்பெகிஸ்தான் செல்லும் அவர், தலைநகர் தாஷ்கண்டில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முக்கியமாக பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
பின்னர் அங்கிருந்து கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி, தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் அவர் இந்தியாவின் பாதுகாப்பு, இணைப்பு மற்றும் சாத்தியக்கூறு முன்னுரிமைகள் குறித்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியின் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் பயணத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு மற்றும் உலகத் தலைவர்களுடனான முக்கிய சந்திப்புகள் அடங்கும். இப்பயணம் இந்தியா-ரஷியா உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். அங்கு பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதுடன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்தவுள்ளார். பிற சந்திப்புகள் குறித்த விவரங்கள் இறுதி செய்யப்பட்டதும் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.