புதுடெல்லி,
புதுடெல்லியில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வந்த 140-க்கும் மேற்பட்ட விவசாயிகளை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து அவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, அடுத்து வரும் 2 வார காலத்திற்குள் நியாயமான, லாபகரமான கரும்புக்கான விலை உயர்வு அறிவிக்கப்படும். இந்த விலை உயர்வானது 2017-18-ம் ஆண்டை ஓப்பிடுகையில் 2018-19-ம் ஆண்டுக்கான விலை அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் மோடிக்கு ஏர் கலப்பையை பரிசாக வழங்கினர்.