தேசிய செய்திகள்

ஐ.நா. பொதுசபையில் வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி உரை

நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் வரும் 25-ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றுகிறார்.

புதுடெல்லி,

ஐ.நா. பொதுசபையின் 76-வது அமர்வு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த அமர்வில் உயர்மட்ட பிரிவின் பொது விவாதத்தில் பல்வேறு நாடுகளில் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி ஐ.நா. பொதுசபையில் உரையாற்றுகிறார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முன்னதாக வரும் 24-ம் தேதி அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு