தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

மேற்கு வங்காளத்தில் எல்.பி.ஜி. இறக்குமதி முனையம், பைப்லைன் பிரிவு மற்றும் பறக்கும் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்து இருந்தது.

பிரதமர் மோடி, அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் தேகியாஜுலி பகுதியில் 2 மருத்துவமனைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளுக்கான அசோம் மாலா என்ற திட்டம் ஆகியவற்றுக்கான அடிக்கல்லை இன்று நாட்டுகிறார் என்று தெரிவித்திருந்தது.

இதேபோன்று, மேற்கு வங்காளத்தின் ஹல்டியா நகருக்கு அவர் செல்கிறார் என தெரிவித்து இருந்தது. இதன்படி, பிரதமர் மோடி, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் கட்டிய கியாஸ் சிலிண்டர் இறக்குமதிக்கான முனையம் ஒன்றை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்து உள்ளார்.

தோபி-துர்காபூர் பகுதியில் பிரதம மந்திரி உர்ஜா கங்கா திட்டத்தின் கீழ் இயற்கை வாயு பைப்லைன் பிரிவொன்றையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். ஹல்டியா நகரின் ராணிசக் பகுதியில் நவீன 4 வழி பறக்கும் சாலை ஒன்றையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்