Image Courtacy: ANI 
தேசிய செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதன்படி 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன.

இதனைத்தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கூட்டம், கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டணியில் மொத்தம் 38 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

முன்னதாக மணிப்பூர் பிரச்சனையை முன்வைத்து கடந்த ஒரு வார காலமாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்துள்ளன.. இதனைத் தொடர்ந்து 21 எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஒன்றாக மணிப்பூர் மாநிலம் சென்று, மணிப்பூர் நிலைமைகளை ஆய்வும் செய்து டெல்லி திரும்பினர். மேலும் அடுத்த "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் மராட்டிய மாநிலத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்