தேசிய செய்திகள்

கடந்த 6 மாதங்களில் மத்திய மந்திரிகளின் செயல்பாடு குறித்து பிரதமர் மோடி ஆய்வு

கடந்த 6 மாதங்களில் மத்திய மந்திரிகளின் செயல்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக ஆட்சி பொறுப்பேற்று நவம்பர் மாதத்துடன் 6 மாதங்கள் நிறைவடைந்தது.

வழக்கமாக மாதந்தோறும் மந்திரிசபை கூட்டங்களுக்கு பின்னர் மத்திய மந்திரிகள் ஒன்றாக சந்தித்துக் கொள்வார்கள். கடந்த சில வாரங்களாக மந்திரிசபை கூட்டங்களின்போது பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மந்திரிகள் அரசின் கொள்கைகளை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார். அந்த நிகழ்வுகளில் பல மந்திரிகளும் உடன் இருப்பார்கள்.

ஆனால் நேற்று பிரதமர் மோடி மந்திரிகளிடம் தனித்தனியாக அவர்களின் கடந்த 6 மாத செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். குறிப்பாக வேளாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகளில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. அப்போது மந்திரிகள் தாங்கள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளித்தனர். காலையில் தொடங்கிய இந்த ஆய்வு மாலை வரை நீடித்தது.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய அளவில் குடிமக்கள் பதிவேடுக்கான கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவரும் வேளையில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு