தேசிய செய்திகள்

வங்கிகள் குறித்த வழக்கு: அரசு கடந்த 3 மாதங்களில் 2,700 க்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்துள்ளது பிரதமர் மோடி

வங்கிகள் குறித்த வழக்குகளில் மத்திய அரசு கடந்த 3 மாதங்களில் 2,700க்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.#PMModi

தினத்தந்தி

புதுடெல்லி,

புதுடெல்லியில் 4-வது குலோபல் வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

முந்தைய குடும்ப ஆட்சியில் வங்கிகளின் சூழலில் எப்படி அமைந்திருக்கிறது என்பதை வங்கி முறை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். வங்கிகள் குறித்த வழக்குகளில் தற்போதைய அரசு கடந்த 3 மாதங்களில் 2,700க்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்துள்ளது.

கடந்த ஆட்சியில் 59 கிராமங்கள் மட்டுமே ஆப்டிக்கல் பைபர் கேபிள் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆப்டிக்கல் பைபர் கேபிள் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகாலத்திற்கு முன்னர் இருப்பதை காட்டிலும் தற்போது இந்தியாவின் பொருளாதார குறிக்கோள் 5 டிரில்லியான நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை