கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: 28-ந்தேதி நடக்கிறது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் வரும் 28-ந்தேதி நடைபெற உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்தநிலையில் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் வருகிற 28-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மூத்த மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்