தேசிய செய்திகள்

நாசிக்கில் தேசிய இளைஞர் திருவிழா: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் திருவிழா(யூத் எக்ஸ்போ) நாளை தொடங்குகிறது.

தினத்தந்தி

நாசிக்,

நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர்கள் திருவிழாவை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் திருவிழா(யூத் எக்ஸ்போ) நாளை தொடங்குகிறது. விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து மண்டல கமிஷனர் ராதாகிருஷ்ண காமே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இளைஞர் திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரிகள் அந்தந்த துறைகளின் பொறுப்பாளர்கள் கிட்டத்தட்ட முடித்துவிட்டனர். விழாவுக்கு வரும் இளைஞர்களுக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் 2,200-க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தங்கியுள்ள இடங்களில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது