தேசிய செய்திகள்

ஆந்திராவில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள கடத்தல் மதுபான பாட்டில்களை ரோடு ரோலர் ஏற்றி அழித்த போலீசார்

ரூ.2.5 கோடி மதிப்புள்ள கடத்தல் மதுபான பாட்டில்களை ஆந்திர போலீசார், ரோடு ரோலரை ஏற்றி அழித்தனர்.

தினத்தந்தி

திருப்பதி,

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.58 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள், சாலையில் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டன.

பின்னர், போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் மதுபான பாட்டில்களின் மீது ரோடு ரோலரை ஏற்றி அழிக்கப்பட்டன. இதனால், சாலை முழுவதும் ரூ.2.5 கோடி மதிப்புடைய மதுபானம் ஆறு போல் ஓடியது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது