தேசிய செய்திகள்

காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் மோட்டார் சைக்கிள் சிக்கியது; நாசவேலை முறியடிப்பு

ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் மோட்டார் சைக்கிள் சிக்கியது.

தினத்தந்தி

ஜம்மு,

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நாசவேலைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் எல்லை பாதுகாப்பு படையினரும், ராஷ்டிரீய ரைபிள் படையினரும் ஈடுபட்டு வருகிறார்கள். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் மெந்தூர் செக்டாரில் உள்ள கோலத் ரீலன்-மெந்தூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு வீரர்கள் சந்தேகத்தின்பேரில் ஒரு மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் 2.4 கிலோ எடையுள்ள கையெறி குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய வீரர்கள், அதில் இருந்த கையெறி குண்டுகளை பத்திரமாக அகற்றி செயலிழக்க செய்தனர். பயங்கரவாதிகளின் நாசவேலை முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு காரணமான பயங்கரவாதிகளை வனப்பகுதிக்கு சென்று தேடி வருவதாகவும் பூஞ்ச் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் அங்க்ரால் தெரிவித்தார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்