தேசிய செய்திகள்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலம் வாக்களிக்கும் முறை கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிந்துரை

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலம் வாக்களிக்கும் முறையை கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

வெளிநாடு வாழ் இந்தியர்களை தேர்தலில் வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு தூதரகங்களில் வாக்குச் சாவடிகளை அமைத்து வாக்களிக்க உதவலாம் என்று ஏற்கனவே முன்மொழியப்பட்டது. மேலும் ஓ.டி.பி., லிங்க் அல்லது மெயில் போன்றவற்றை அனுப்பி இணையம் வழியில் வாக்களிக்க வழிவகை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி எழுதிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் கடிதம் எழுதியுள்ளது. அதில் இணைய வழியில் மின்னணு முறையில் வாக்களிக்கும் முறை இறுதி பரிந்துரையாக சட்டத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் வாக்களிக்க வழிவகை செய்து சட்டம் இயற்றப்பட்டால், அடுத்து நடைபெறும் தேர்தலில் உடனடியாக அமல்படுத்தப்படும் என கூறி உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணைய முறையில் வாக்களிக்க சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் வெளிநாட்டில் வாழ்பவர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு