புதுடெல்லி,
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க மறுத்தது. ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பில் ஆஜரான வக்கீல் ரோகிணி மூசா, தங்கள் தரப்பில் எதிர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை அடுத்த மாதம்(பிப்ரவரி) இறுதி வாரத்துக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.