தேசிய செய்திகள்

டெல்லியில் 2-வது நாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டம்

போராட்டத்தையொட்டி சங்க உறுப்பினர்கள் பேரணி செல்ல முயன்ற போது போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் மின்துறை ஊழியர்களின் போராட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. நேற்று 2-ம் நாள் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் கூட்டமைப்பு, சி.ஐ.டி.யு., தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் மின் பொறியாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு மற்றும் கட்சிகளைச் சேர்ந்த சேக்கிழார், ராஜேந்திரன் மற்றும் குடந்தை அரசன் உள்ளிட்ட நிர்வாகிகளும், நூற்றுக்கணக்கான உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தையொட்டி சங்க உறுப்பினர்கள் பேரணி செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஜந்தர் மந்தர் ரோட்டில் குழுமி கோஷங்கள் எழுப்ப மட்டுமே அனுமதித்தனர். நேற்று முன்தினமும் இதுபோல போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து