தேசிய செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றார். அவருக்கு வயது 64. கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி ஜனாதிபதி முர்மு ராணுவ மருத்துவமனையில் இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இந்திய ஜனாதிபதி, திரவுபதி முர்மு இன்று காலை புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்