புதுடெல்லி,
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதயப் பிரச்னை காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த (26-ம் தேதி) வெள்ளிக் கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தகுடியரசுத் தலைவர் அடுத்த நாள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்கு அவருக்கு பரிசோதனைகள் நடைபெற்றன.
பின்னர் அவரை இதயஅறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து, நேற்று அவருக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இதுதொடர்பாக மத்தியப் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது டுவிட்டரில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதற்காக மருத்துவக் குழுவினருக்கு எனது பாராட்டுகள். அவரது உடல்நலம் குறித்து எய்ம்ஸ் இயக்குநரிடம் பேசினேன். அவர்விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறும்போது, குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்துக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் தற்போது நலமுடன் உள்ளார். தொடர்ந்து சில நாட்கள் அவர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருப்பார் என்று அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது டுவிட்டரில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதற்கு மகிழ்ச்சி. ஒவ்வொரு நாளும் அவருக்கு புதிய பலத்தை அளிக்கட்டும். அவர் விரைவாக குணமடைய எனது வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் என்று பதிவிட்டுள்ளார்.