தேசிய செய்திகள்

ஜனாதிபதி சாமி தரிசனம் செய்தபின் சிறப்பு ரெயிலில் லக்னோ புறப்பட்டார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் சிறப்பு ரெயிலில் லக்னோவுக்கு புறப்பட்டு சென்றார்.

தினத்தந்தி

லக்னோ,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேசத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஜென்மாஸ்டமியை முன்னிட்டு இன்று அயோத்தி ராம் லல்லா கோவிலில் வழிபாடு நடத்தினார். இதன் மூலம் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யும் முதல் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அயோத்தி ராம் கதா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராமாயண மேளாவை தொடங்கி வைத்து உள்ளார்.

இதன்பின்பு அனுமன் கோவில், ராமர் கோவிலில் தனது மனைவி சவீதா கோவிந்த் உடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து சிறப்பு ரெயில் ஒன்றில் அயோத்தியா நகரில் இருந்து லக்னோ நகருக்கு புறப்பட்டு சென்றார். அவர்களை கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்..

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்