தேசிய செய்திகள்

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 127 வீரர்\வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடத்தை கைப்பற்றியது.

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய வீரர்\வீராங்கனைகள் நேற்று நாடு திரும்பினர். நாடு திரும்பிய வீரர்\வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேதி தேநீர் விருந்து அளிக்க உள்ளார். புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதிபவனில் இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை