தேசிய செய்திகள்

ஜி 7 உச்சி மாநாடு: இத்தாலி சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றிருந்த, பிரதமர் மோடி இன்று இந்தியா திரும்பினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த அமைப்பின் தலைமை பொறுப்பு வகிக்கும் இத்தாலி, நடப்பு ஆண்டுக்கான ஜி-7 மாநாட்டை இத்தாலியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள சொகுசு விடுதியில் நடத்தி வருகிறது.

இத்தாலியின் அழைப்பின்பேரில், இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.   ஜி-7 மாநாட்டுக்கு இடையே, மாநாட்டுக்கு வந்துள்ள பிற நாட்டு தலைவர்களான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.ஜி 7 மாநாடு முடிந்த பிறகு இத்தாலியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார்.

ஜி 7 மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, "மாநாடு ஆக்கப்பூர்வமாக இருந்தது. தலைவர்களுடனான சந்திப்பு பயனுள்ள வகையில் அமைந்தது. எதிர்கால தலைமுறையினருக்கான சிறந்த உலகத்தை அமைப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசித்தோம்" என்று பதிவிட்டுள்ளார். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு