தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணியளவில் உரையாற்றுகிறார். முன்னதாக, மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி ஆல் இந்தியா ரேடியோ வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இரவு 8 மணியளவில் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தனது உரையில் எடுத்துரைக்கலாம் எனத்தெரிகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசவில்லை. மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் மட்டுமே பிரதமர் மோடி கருத்து கூறியிருந்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு