பெங்களூரு:
இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கலந்து கொண்டு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது. அந்த அணியில் வீராங்கனையாக இடம் பெற்று இருப்பவர் கர்நாடகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி கெய்க்வாட். இதையடுத்து அவருக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'காமன்வெல்த் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள கர்நாடக வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட்டிற்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.