தேசிய செய்திகள்

புதிதாக திறக்கப்பட்ட பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக போராட்டம்

முழு திட்டமும் முடியும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

ராமநகரா,

பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த இரண்டு நாட்களுக்குள், சரியான சர்வீஸ் சாலைகள் இல்லாமல் கட்டணம் வசூலிப்பதாக சுங்கச்சாவடி அருகில் பல அமைப்புகள் போராட்டம் நடத்தின.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முழு திட்டமும் முடியும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படவில்லை என்றும், சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

முதல் நாள் சுங்கக் கட்டணம் வசூலின் போது, சில தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்பட்டதால், நெரிசல் காரணமாக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

தினசரி பயணத்தை மேற்கொள்ளும் ஓட்டுநர்கள், குறுகிய தூரங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்காக வேதனை தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு