தேசிய செய்திகள்

மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றி - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்குரிய பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"மகேந்திரகிரியில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் இறுதிக்கட்ட பி.எஸ்.4 எஞ்சின் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவுகள் துல்லியமாக கிடைத்துள்ளன. எஞ்சின் பாகங்கள் உறுதியாக இருக்கின்றன. ராக்கெட்டின் எடையை குறைக்கும் வகையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன."

இவ்வாறு சோம்நாத் தெரிவித்தார். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்