தேசிய செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்; விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட், இன்று மாலை 3.25 மணிக்கு 1வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான பூமி கண்காணிப்பு செயற்கைகோளான ரீசாட்-2பிஆர்1 என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.

அத்துடன், இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான வெளிநாடுகளை சேர்ந்த 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த செயற்கைகோள்கள் பூமியில் இருந்து 576 கிலோ மீட்டர் உயரத்தில் 37 டிகிரியில் நிலை நிறுத்தப்படுகிறது.

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோளின் எடை 628 கிலோ ஆகும்.

இது இந்தியாவின் 50-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இறுதிக்கட்ட பணியான 23 மணி நேர கவுண்ட்டவுன் (22 மணிநேரம் 45 நிமிடம்) நேற்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது.. கவுண்ட்டவுனை முடித்து கொண்டு திட்டமிட்டப்படி இன்று மாலை 3.25 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதன்பின்பு 15 நிமிடங்களில் ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்