தேசிய செய்திகள்

பஞ்சாப்; பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு; செங்கற்களால் தாக்கி ஒருவர் கொலை

பக்கத்து வீட்டுக்காரருடன் எற்பட்ட தகராறில் செங்கற்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் உள்ள தனன்சு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோக் சிங். இவருடைய பக்கத்து வீட்டுக்காரருக்கும் இவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டின் சுவரை சரிசெய்யும் வேலையில் ஈடுபட்டபோது அதிலிருந்து விழும் குப்பைகள் சந்தோக் வீட்டின் வளாகத்தில் விழுந்தன.

இது குறித்து இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. இதில் ஆத்திரம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் சந்தோக் சிங்கை செங்கற்களால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சந்தோக் சிங்கை அவருடைய மகன் ஜஸ்வந்த் சிங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இது குறித்து அவருடைய மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பக்கத்து வீட்டுக்காரர் போதைப்பொருள் கடத்தும் தொழிலில் ஈடுபட்டார். அதனை தடுக்கும் வகையில் என்னுடைய தந்தை செயல்பட்டார். இது அவருக்கு என் தந்தை மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதற்கு பழிவாங்கும் வகையில் அவர் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார் என கூறியுள்ளார்.

காவலர்கள் இந்த கொலை வழக்கில் சம்பந்தபட்டவர் மீது எப்ஐஆர் பதிவு செய்து அவரை கைது செய்ய சென்றனர். இதனை அறிந்த குற்றம் சாட்டப்பட்டவர் அங்கிருந்து தப்பி ஓடினார். காவலர்கள் அவரை கைது செய்யும் முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?