தேசிய செய்திகள்

பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் நாளை டெல்லி பயணம்

பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் தனது டெல்லி அரசுப் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை நேரில் சென்று பார்வையிடுகிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆமோக வெற்றிப்பெற்ற ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து பஞ்சாப் முதல்-மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்றார். அதன்பிறகு, தாங்கள் அளித்த வாக்குறுதிகளை பஞ்சாப் அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.

இதற்கிடையே, டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆம் ஆத்மி கட்சி கொண்டு வந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண பகவந்த் மான் மற்றும் பஞ்சாப் அமைச்சர்கள் வருகை தருவார்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதன்படி, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் தனது அமைச்சரவை அமைச்சர்களுடன் நாளை டெல்லி அரசுப் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளுக்கு நேரில் சென்று பார்வையிடுகிறார். இவர்களுடன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்துக் கொள்கிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்