தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப் முதல்வர் போராட்டம்

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டன. இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ராஜஸ்தான் பேரவைகளில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.வேளாண் சட்டங்கள் குறித்து ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவதற்கு பஞ்சாப் முதல்வா அமரீந்தா சிங் அனுமதி கோரியிருந்தா. ஆனால், அதற்கு ஜனாதிபதி அலுவலகம் சாபில் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று பஞ்சாப் முதல்வா அமரீந்தா சிங் தலைமையில் பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகவும் அமரீந்தர் சிங் கடுமையாக சாடினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை