தேசிய செய்திகள்

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும் இந்த ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை கோரிய மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் புகார் கூறிய காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை மத்திய அரசும், பா.ஜனதாவும் குறை கூறியுள்ளன. இந்த விவகாரத்தில் பொய் குற்றச்சாட்டு கூறியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பா.ஜனதாவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜனதாவினர் நேற்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த போராட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் குபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை