புதுடெல்லி,
பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனிறி உயிரிழ்ந்தார். அவருக்கு வயது 99 ஆகும்.
இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதுவது,
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.