தேசிய செய்திகள்

”ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும்” ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு

ஐ.என்.சி ( இந்திய தேசிய காங்கிரஸ்) என்றால் ஐ நீட் கமிஷன் ( எங்களுக்கு கமிஷன் தேவை) என்று அர்த்தம் என பாஜக சாடியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த 2007- முதல் 2012 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தின் போது ரபேல் விமான ஒப்பந்தத்தில் இடைத்தரகருக்கு லஞ்சம் தரப்பட்டதாக பிரான்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தி இந்திய அரசியலில் பரபரப்பை பற்றவைத்துள்ளது. பிரான்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தியில், இடைத்தரகர் லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் கிடைத்த போதிலும் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதில் சிபிஐ தோல்வி அடைந்துவிட்டதாவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ள பாஜக, ராகுல் காந்தி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக கூறுகையில், இந்திய தேசிய காங்கிரஸ் ( ஐ.என்.சி) என்றால் ஐ நீட் கமிஷன் ( எங்களுக்கு கமிஷன் தேவை) என்று அர்த்தம்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வத்ரா ஆகிய அனைவரும் எங்களுக்கு கமிஷன் தேவை எனக்கூறுகின்றனர். ரபேல் விவகாரத்தில் இத்தனை ஆண்டுகள் பொய்களை பரப்ப காங்கிரஸ் கட்சி ஏன் முயற்சித்தது என ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும்.

தற்போது ராகுலின் காங்கிரஸ் அரசாங்கம் இருந்த சமயத்தில் தான், கமிஷன்கள் கொடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதற்கு இடைத்தரகராக செயல்பட்டவரின் பெயரும் தெரியவந்துள்ளது என்று விமர்சித்துள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு