தேசிய செய்திகள்

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளிநடப்பு

டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கூடியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கூடியது. இதில் அனைத்து கட்சிகளின் முக்கிய எம்பி.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு விவகாரங்களான பாகிஸ்தானுடனான பிரச்சினை, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீனாவுடனான மோதல், ஆப்கானிஸ்தான் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், ராகுல் காந்தியின் கோரிக்கையை குழு தலைவர் நிராகரித்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து, ராகுல் காந்தி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் பங்கேற்றிருந்த காங்கிரஸ் எம்.பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற குழு தலைவர் ஜூயல் ஓரம் கூறுகையில், கண்டோன்மெண்ட் போர்டுகளின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்க திட்டமிடப்பட்டது. எனவே, அது பற்றி மட்டுமே விவாதிக்க முடியும். வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் விரும்பினால், அதற்கான விதிகளை பின்பற்றி 14 நாட்கள் முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு