தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் கடும் பனி பொழிவுக்கு இடையே இயங்கிய ரெயில்

இமாசல பிரதேசத்தில் கடும் கடும் பனி பொழிவுக்கு இடையே ரெயில் சேவை இயங்கியது.

தினத்தந்தி

சிம்லா,

வடமாநிலங்களில் குளிர்கால சூழலை முன்னிட்டு கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு குளிர் வாட்டி வருகிறது.

வாகனங்கள், தெளிவற்ற வானிலையால் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இவற்றில் இமாசல பிரதேசத்திலும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. வீடுகள், சாலைகள் என பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவால் வெண்போர்வை போர்த்தியது போன்று பனி அடர்ந்து காணப்படுகிறது.

எனினும், இந்த பனிப்பொழிவிலும் சிம்லா நகரில் ரெயில் சேவை தொடர்ந்து இயங்கி வருகிறது. ரெயில் தண்டவாள பகுதியில் பனி சூழ்ந்த நிலையில், ரெயில் ஒன்று மெல்ல ஊர்ந்து செல்லும் காட்சி பதிவு வெளிவந்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை