தேசிய செய்திகள்

ரெயில்வே ஓட்டல் முறைகேடு: லாலு பிரசாத் மற்றும் ராப்ரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009–ம் ஆண்டுவரை ரெயில்வே மந்திரியாக இருந்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

லாலு பிரசாத் யாதவ் பதவிக்காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமான 2 ஓட்டல்களின் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக லாலு மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார் ரூ.44 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவியும், பீகார் மாநில முன்னாள் முதல்மந்திரியுமான ராப்ரி தேவி ஆகியோருக்கு எதிராக டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதைப்போல லாலுவின் மகனும், பீகார் முன்னாள் துணை முதல்மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து