தேசிய செய்திகள்

டெல்லி-வாரணாசி இடையிலான அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயரிடப்பட்டது

டெல்லி-வாரணாசி இடையிலான அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ரெயில்வே துறையால் நாட்டின் அதிவிரைவு ரெயிலான டிரெயின் 18 வருகிற 29-ந்தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 160 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடிய உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் தயாரிக்க ரூ.97 கோடி செலவாகியுள்ளது. புல்லட் ரெயில் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ரெயில் 16 பெட்டிகள் உள்ளது. முற்றிலும் உள்நாட்டிலே தயார் செய்யப்பட்ட இந்த ரெயிலுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டி குடியரசு தின பரிசாக மக்களுக்கு வழங்குகிறோம் என ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு