தேசிய செய்திகள்

ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

ராய்ப்பூர்:

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிவம் பவார் (20) என்பவர் ராய்ப்பூர் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் இன்று மதியம் வகுப்பில் கலந்து கொண்ட அவர் பிறகு தனது விடுதி அறைக்கு திரும்பி உள்ளார். சிறிது நேரம் கழித்து மற்ற மாணவர்கள் விடுதிக்கு சென்று பார்த்த போது அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு