தேசிய செய்திகள்

வேட்பாளரை திரும்ப பெற்ற பா.ஜனதா; பட்னாவிசுக்கு ராஜ் தாக்கரே நன்றி

அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜனதா திரும்ப பெற்ற விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என பா.ஜனதா, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேட்டு கெண்டு இருந்தார்.

இந்தநிலையில் பா.ஜனதா அந்தேரி கிழக்கு தொகுதியில் நிறுத்தி இருந்த வேட்பாளரை திரும்ப பெற்றது. இதையடுத்து பா.ஜனதா சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்த முர்ஜி பட்டேல் அதை திரும்ப பெற்றார்.

இந்தநிலையில் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜனதா திரும்ப பெற்ற விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், " நேர்மறையான அரசியல் கலாச்சாரத்தை கொண்டு இருப்பது அவசியமாகும். இதுபோன்ற நல்ல கலாச்சாரம் பரவ நவநிர்மாண் சேனா எப்போதும் ஆதரவாக இருக்கும். எனது கோரிக்கைக்கு செவி கொடுத்தற்கு நன்றி. " என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை