கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இன்று தேர்வாகிறார் ராஜஸ்தான் முதல்-மந்திரி..!!

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

கடந்த நவம்பர் மாதத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கனா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கனாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி ஆட்சியை பிடித்தது. ஏனைய மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.

இந்த சூழலில் ராஜஸ்தானில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் கடந்த பின்னரும் இன்னமும் முதல்-மந்திரி யார்? என்று பா.ஜனதா அறிவிக்காமல் உள்ளது.

இதற்கிடையே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளார்கள். இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளர்கள் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், சரோஜ் பாண்டே, வினோத் தாவ்டே ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே சமயம் மத்திய மந்திரிகள் அர்ஜூன்ராம் மேக்வால், கஜேந்திரசிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் முதல்-மந்திரி தேர்வு பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்